கிருஷ்ணகிரி, ஜூன் 16- கிருஷ்ணகிரி நகர்மன்ற கூட்டம், தலைவர் பரிதாநவாப் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் ஸ்டான்லி பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கிருஷ்ணகிரி நகரில் 29 ஆண்டுகளாக மாங்கனி கண்காட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டு வந்துள்ளது.
இந்த முறை நடைபெற இருக்கும் 30 வது மாங்கனி கண்காட்சிக்கு வேறு இடத்தை தேடிக் கொண்டிருப்பதாக தெரிய வருகிறது. கிருஷ்ணகிரி நகர மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக விளங்க கூடிய மாங்கனி கண்காட்சி, தொடர்ந்து நகர மையப்பகுதியில் உள்ள அதே இடத்தில் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே கிருஷ்ணகிரி நகரில் வழக்கமாக நடைபெறும் இடத்திலேயே மாங்கனி கண்காட்சி நடத்த வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.