districts

img

பழிவாங்கலை கைவிடாவிட்டால் போராட்டம்: கட்டேரா நிறுவன தொழிலாளர்கள் அறிவிப்பு

கிருஷ்ணகிரி,அக்.9- வேப்பனப்பள்ளி சிப்காட்டில் உள்ள கட்டேரா தொழிற்சாலை நிர்வாகத்தின் பழிவாங்கல் கைவிடாவிட்டால் ஆலைத் தொழிலாளர்கள் பெரும் போராட்டத்தில் இறங்கு வார்கள் என சிஐடியு அறி வித்துள்ளது.      கட்டேரா தொழிற்சாலை யில் உடனடி கட்டிட கட்டு மான பொருட்கள்  தயாரிக்கப்பட்டு வருகிறது. 2014 ல்  தொழிற்சாலை துவங்கப்பட்ட போது ஒப்பந்த அடிப்படையில் 2500 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வந்தனர்.  தற்போது 300 தொழி லாளர்கள் மட்டுமே உள்ள னர். இதில் மிகக் குறைந்த  தொழிலாளர்களே நிரந்தரப் படுத்தப்பட்டுள்ளனர்.  8 ஆண்டுகள் பணி புரிந்தும் நிரந்தர தொழி லாளர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே ரூ20,000 ஊதியம் கொடுக்கப்படுகிறது. ஒரே மாதிரியான வேலையை செய்யும் தொழிலாளர்களில் ஒரு சிலருக்கு  அதிக மாகவும், ஒரு சிலருக்கு குறைவாகவும் ஊதியம் வழங்கி தமிழர், வட இந்தியர் என்று  பிரித்தாளும் போக்கு கையாளப்பட்டு வருகிறது.  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மிக குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது.  தொழிற்சாலைக்குள் பவுன்ராஜ் என்ற தொழி லாளி இயந்திரத்தில் சிக்கி இறந்த போதும், பல விபத்து கள் நடந்த போதும் நிர்வாகம் சட்டப்படியான நிவாரணம் வழங்க வில்லை  மேலும் தொழிலாளர் நல சட்டப்படியான அடிப்படை ஊதியம்,உரிமைகள், பாதுகாப்பு உபகரணங்கள், இஎஸ்ஐ, பிஎப்,போனஸ் வழங்கப்படுவதில்லை. கடந்த மூன்று மாதங்களாக பல தொழிலாளர்களுக்கு ஊதியம் கூட வழங்கப் படாத நிலையும் உள்ளது. இதுகுறித்து பல முறை தொழிலாளர் நலத் துறையிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை மனு அளித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை.    

   இந்நிலையில் சிஐடியு சங்கத்தில்  துவங்கியதற்காக 20 தொழிலாளர்களை மகா ராஷ்டிரா மாநிலம் அவுரங்கா பாத் கிளைக்கு பணி மாறுதல் செய்துள்ளதாக கூறி அவர்களுக்கு இங்கு வேலை வழங்க நிர்வாகம் மறுத்து வருகிறது.    இந்நிலையில்  சனிக் கிழமையன்று  கட்டேரா தொழிற்சாலை வாயில் முன்பு சிஐடியு சங்க துவக்க பெயர் பலகை திறப்பு கொடியேற்றம்  நடை பெற்றது. மாவட்டத் தலை வர் வாசுதேவன் தலைமை யில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநிலக் குழு உறுப்பினருமான பி.டில்லி பாபு சங்க கொடி ஏற்றி னார். சிஐடியு மாவட்ட செய லாளர் ஸ்ரீதர் பெயர் பலகையை திறந்து வைத்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் வாழ்த்தி பேசினார். மாவட்ட பொருளாளர் ஜி.ஸ்ரீதரன், நிர்வாகிகள் பீட்டர், பி.ஜி. மூர்த்தி, கருணாநிதி, குருநாதன், கோவிந்தம்மாள், மாதவன், பிரபாகரன், தேவி, கட்டேரா ஆலை சிஐடியு சங்க தலை வர் குமாரவேல், பொரு ளாளர் பாலகுமார், துணை தலைவர் உதய், கிளை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  தொழிலாளர் நலத்துறை யும் மாவட்ட ஆட்சிய ரும் உடனடியாக தலை யிட்டு  ஒப்பந்த தொழிலாளர் களுக்கு சட்ட கூலியை அமல்படுத்தவும், நிரந்தர தொழிலாளர்களுக்கு ஒப்பந்தம் மூலம் உழைப்புக்கு ஏற்ற ஊதிய உயர்வு வழங்க வும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். போராட்த்தின் இறுதியில் கட்டேரா  சங்க செயலாளர் சுஜில் நன்றி கூறினார்.