districts

img

குடிநீர் கேட்டு சாலை மறியல்

மத்தூர், ஜூன் 21- கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், கண்ணன்ட ஹள்ளி ஊராட்சி, கண்ணட ஹள்ளி கூட்டுச் சாலை பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு நீண்ட நாட்களாக குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் திருவண்ணாமலை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாயன்று (ஜூன் 21) சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மத்தூர் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.