கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட குல்லட்டி காப்புக்காடு எல்லையில் மேலூர் முதல் ஒம்மாண்டபள்ளி வரை மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியின் மூலம் 1 கோடியே 75 லட்சம் மதிப்பில் 5 கி.மீ. தூரத்திற்கு இரும்பு வட கம்பி வேலியும், மேலூர் வனப்பகுதியில் தொங்கும் வகையிலான மின்வெளி அமைக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் புதனன்று (ஏப். 12) ஆய்வு செய்தார். ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயினி உடன் இருந்தார்.