கிருஷ்ணகிரி,ஜன 8- ஓசூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, உத்தனப்பள்ளி சாலைகளில் மாணவர்களுக்காக மாலை நேரங்களில் கூடுதலாக அரசு நகரப் பேருந்து இயக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுரேஷ், ஓசூர் வட்டச் செய லாளர் நாகேஷ் பாபு, நிர்வாகிகள் இளவரசன், முருகன் ஆகியோர் அரசு போக்குவரத்துக் கழக ஓசூர் கிளை மேலாள ரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவின் விவரம் வருமாறு:- கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே சினிகிரிப் பள்ளி மாணவி நிவ்யஸ்ரீ சில நாட்களுக்கு முன்பு பேருந்தில் இருந்து தவறி விழுந்த விபத்தால் சிகிச்சை பல னின்றி இறந்தார். இந்த சம்பவத்திற்கு ஓட்டுநர், நடத்துநர் மீது மட்டும் பழி போடுவது ஏற்புடையதல்ல. குறிப்பாக, பள்ளிகளுக்கும் வேலைக்கு செல்லும் அனைவரும் இந்த சாலை களைதான் பயன்படுத்து கின்றனர். ஆனால், இந்த வழித் தடங்களில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை ஒன்றி ரண்டு நகர பேருந்து கள் நீண்ட நேர இடை வெளிக்குப் பிறகு இயக்கப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை. எனவே, நீண்ட நேரம் காத்திருப்பதால் இந்த அதிகமாகிவிடுகிறது. படிக்கட்டில் தொங்கி வரும் அவலம் ஏற்படுகிறது. குறிப்பாக ஓசூர்-கெலமங்கலம், ஓசூர்-தேன்கனிக்கோட்டை,ஓசூர்-உத்தனப்பள்ளி சாலைகளில் காலை மாலை நேரங்களில் இந்த நெருக்கடி நிலை நீடிக்கிறது. ஆகவே, விபத்து மற்றும் உயிரிழப்பு களை தவிர்க்க பள்ளி-கல்லூரி சென்று வரு வதற்கு ஏற்ப காலையும் மாலையும் கூடுதலாக நகர பேருந்துகளை இயக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தியி ருந்தனர்.