districts

img

மா விவசாயத்துக்கு  மானிய விலையில் உரம்-பூச்சி மருந்து வழங்க கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஜூன் 1- மா விவசாயத்திற்கு மானிய நிலையில் உரம்,பூச்சி மருந்து வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிருஷ்ணகிரி வட்ட மாநாடு வேப்பனப்பள்ளியில் நடைபெற்றது. சுப்பிரமணி முன்னிலை வகித்தார். வட்டச் செயலாளர் ெஜய்சங்கர் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்டச் செயலாளர் பிரகாஷ் நிறைவு செய்து பேசினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பூச்சித் தொல்லை, சூறைக்காற்று, ஆலங்கட்டி மழை உள்ளிட்ட பிரச்சனைகளால் சாகுபடி விவசாயிகள் பாதித்தனர். எனவே விவசாயிகளுக்கு நிவாரணம், குறைந்த விலையில் பூச்சி மருந்து, உரம், குறைந்த வட்டியில் மானிய கடன் வழங்க வேண்டும்.  நீண்டகாலமாக  பயன்பாடின்றி புதர்கள் மண்டி காணப்படும் வேப்பனப்பள்ளி பேருந்து நிலையத்தை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் வட்டத் தலைவர் குணசேகரன், செயலாளராக சின்னராஜ், பொருளாளர் சங்கரநாராயணன் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.