கிருஷ்ணகிரி, ஜூலை 19- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சூளகிரி வட்ட மாநாடு ராமன் தொட்டி யில் நடைபெற்றது. முனியப்பா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பிரகாஷ் துவக்கி வைத்தார். மாவட்டத் தலை வர் முருகேஷ், அஞ்செட்டி வட்டச் செய லாளர் சிவராஜ், தலைவர் முனிசிவா, பொரு ளாளர் குமார வடிவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். மாநில துணைத் தலை வர் சண்முகம் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முருகன் நன்றி கூறினார். ராமன் தொட்டி, நாகமலை, சின்ன குத்தி, பெரிய குத்தி, முனியம்மா பிரிட்ஜ் உட்பட 16க்கும் மேற்பட்ட கிராமங்க ளில் வசிக்கும் மலைவாழ் பழங்குடிகளான இருளர் இன மக்களுக்கு சாதிச் சான்றும், அந்த மக்கள் வசிக்கும் குடி யிருப்புகளுக்கும், நீண்ட காலமாக விவ சாயம் செய்து வரும் நிலத்திற்கும் பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தலைவராக கெஞ்சப்பா, செயலாளராக முருகன், பொருளாளராக மாதேஷ் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.