districts

img

எம்ஜிஆர் கல்லூரியில் முதுகலை வணிகவியல் ஆராய்ச்சி கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி, பிப். 25- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் கல்லூரி வளாகம் எம்ஜிஆர் கல்லூரியில் முதுகலை வணிகவியல் ஆராய்ச்சி கருத்த ரங்கம் இரண்டு நாட்கள் நடை பெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் முத்துமணி தலைமை தாங்கினார்.  அண்ணாமலை பல்கலைக்கழக வணிகவியல் ஆராய்ச்சித் துறை முன்னாள் தலை வர் இளங்கோவன், பெங்களூரு கெமர்ஸ் தொழிற்சாலை வணிக வியல் உலகளாவிய ஆதாரம் சேவை விநியோக துறைத் தலை வர் மஞ்சு ரெட்டி, பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை தலைவர் முத்துச்செழியன் ஆகியோர் பேசினர். கல்லூரியின் துறை பேராசிரியர் வெங்கடேஷ் நன்றி கூறினார் வணிகவியல் துறை விஞ்ஞான தொழில் நுட்பத்தில் அதிவேக வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது எலன் மாஸ்க் நிறுவனம் 10,000 பேரையும், இன்போசிஸ் நிறுவனம் 7,000 பேரையும் உபரி என்று கூறி வேலையில் இருந்து வெளியேற்றியுள்ளனர். மேலும் 40,000 பேர் உடனடியாக வெளியேற்றப்பட உள்ளனர். தொழில் நுட்பம் வளர்சிக்கேற்ப வணிகவியல் மாணவர்கள் தொழில், சேவை, வியாபாரம், விநியோகம், புதிய உருவாக்கம், கண்டுபிடிப்பு குறித்து புதிய நுணுக்கங்களை கற்று முன்னேற வேண்டும். இத்துறை புதிதாக உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து மாணவர்களே மாநிலம் முழுவதும் முதல் மதிப்பெண் பெற்று வந்தனர் என்று பெரியார் பல்கலைக்கழக முன்னாள் வணிகவியல் துறைத் தலைவர் இளங்கோவன் கூறினார்.