கிருஷ்ணகிரி, பிப்.4- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தை மாத்தில் எருதுவிடும் விழா நடத்துவது வழக்கம். கொரோனக் காலக் கட்டத்தில் நடத்தவில்லை. இதனால், இந்த ஆண்டும் பல்வேறு கிராமங்களில் எருதுவிடும் விழா நடத்தப்பட்டு வருகிறது. வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி யில் நடந்த விழாக்களில் விதிமுறை கள் சரியாக பின்பற்றப்படவில்லை என்பதால் மூன்று பேர் உயிரிழந்த னர். இதை காரணம் காட்டி கெல வரப்பள்ளி, அஞ்செட்டி உட்பட பல இடங்களில் எருதுவிடும் விழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் அனு மதிக்கவில்லை. இந்த நிலையில், சூளகிரி வட்டத்திலுள்ள கோபச்சந்திரம் கிராமத்தில் எருது விழா நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள னர். ஓசூர் சாராட்சியர் சரண்யா தலை மையில் கால்நடை, காவல்-தீ அணைப்பு, வருவாய், மின்சாரம் உள்ளிட்ட துறையினர் ஆய்வு செய்து அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனால் விழா நடத்த கோபச் சந்திரம் கிராமத்தில் ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தனர். இத னால், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருப்பத்தூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த ஆனைக்கல், கோலார், அத்திப்பள்ளி, மாலூர் பகுதிகளில் இருந்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களது காளைகளுடன் குவிந்தனர். விழா ஏற்பாட்டை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம் எரு தாட்டம் நடத்துவதற்கான கட்ட மைப்புகள் முறையாக அமைக்கப்பட வில்லை என்றும் வாடி வாசலை சிதைத்ததுடன் அங்கிருந்தவர்களை அடித்து விரட்டியுள்ளனர். இதனால், விழா தொடங்கவில்லை. ஏற்கனவே, இரண்டு ஆண்டு கால மாக விழாவுக்கு தடை விதிக்கப் பட்டதால், இந்த முறையும் மக்கள் ஏமாற்றமடைந்தனர். இதனால், ஆத்திரமடைந்த இளை ஞர்கள் பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் டிப்பர் லாரிகளை குறுக்கே நிறுத்தியும் ஜல்லி கற்கள், மண்ணையும் கொட்டியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை யின் இருபுறமும் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி வட்டாட்சியர் அனிதா மற்றும் அதிகாரி கள், காவல் துறையினர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து அனுமதி எழுதி கொடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கோஷங்கள் எழுப்பியதுடன் அங்கிருந்த வாக னங்கள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேத மடைந்தது. இரண்டு பெண் காவ லர்கள் உட்பட 10 க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் பொது மக்களும் காயமடைந்தனர். இதனையடுத்து, சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோர் தலைமையில் அதிவிரைவுப் படை காவலர்கள், வஜ்ரா வாகனம் மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் குவிக்கப்பட்டனர். மேலும், சேலம், தருமபுரி மாவட்டங்களில் இருந்தும் காவர்களை கொண்டு வந்து இறக்கியதோடு தண்ணீரை பீச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டு களை வீசினர். தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர் கள் நாலபுறமும் சிதறியோடினர். அப்போது இளைஞர்கள் சிலரை கைது செய்த காவல்துறை, மனித உரிமைகளை மதிக்கவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பூட்ஸ் காலால் எட்டி எட்டி உதைத்தும் லத்தியால் அடித்தும் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் 300 பேரை கைது செய்தனர். ஏராளமானோர் மீது வழக்கும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு தலைமையில் மாவட்டச் செயலாளர் ஜிகே.நஞ்சுண்டன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேஷ், பொரு ளாளர் எம்எம்.ராஜூ,வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இள வரசன்,ஓசூர் மாநகர செயலாளர் சிபி.ஜெயராமன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் லெனின் முருகன், நாராயண மூர்த்தி, மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் சரஸ்வதி உள்ளிட்டோர் கோபச்சந்திரம் சின்ன திருப்பதி,காமன்தொட்டி, சூளகிரி ஆகிய பகுதிகளுக்கு சென்று கள ஆய்வு செய்தனர். இந்த விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களோ கோபச்சந்திரம், காமன் தொட்டி, சூளகிரி பகுதியை சேர்ந்தவர்கள் யாருமே வன்முறையில் ஈடுபட வில்லை என்பதும் வெளி மாநிலங்க ளில் இருந்தும் வெளி மாவட்டங்க ளில் இருந்தும் வந்தவர்களே வன்முறைகளில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. ஆனாலும், காவல்துறை யினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களை தெரு தெருவாக மிரட்டி வருவதாக பொது மக்கள் பலரும் சிபிஎம் தலைவர்களிடம் தெரிவித்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த தலைவர்கள், “எருது விடும் விழாவுக்கு அனுமதி கொடுக்காமல் வேண்டுமென்றே நிர்வாகம் இழுத்தடித்துள்ளது. இது தான் கலவரத்திற்கு வழிவகுத்தது என்றும் கலவரத்தை கட்டுப் படுத்திய காவல்துறையினர் மனித உரிமைகளை மீறியது மிகவும் கண்டிக்கதக்கது என்றும் தெரி வித்தனர். பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும் தடியால் அடித்தும் துன்புறுத்திய காவல் அதிகாரி மீது அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் பிடித்துச் சென்றவர்கள் மீது வழக்குப் பதியாமல் விடுக்க வேண்டும். பறிமுதல் செய்த வாகனங்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.