districts

img

ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கிய இஸ்லாமியர்கள்  

கிருஷ்ணகிரி, டிச. 11- கிருஷ்ணகிரியில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் ஐயப்ப பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கினர்.  கிருஷ்ணகிரி பழையபேட்டை மிலாது நபி இஸ்லாமிய இளைஞர் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையிலும், இந்து, முஸ்லிம் இடையே மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையை எடுத்து ரைக்கும் வகையிலும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் 5ஆவது ஆண்டாக அந்த அமைப்பின் சார்பில் தலைவர் முகமது அஸ்லாம்  தலைமையில் ஞாயிறன்று (டிச. 11) கிருஷ்ணகிரி சேலம் சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டிற்கு பூஜை பொருட்களை வழங்கினர். மேலும் ஐயப்ப பக்தர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமிய இளைஞர்கள் அன்னதான உணவுகளை பரிமாறினர். மத நல்லிணக்கத்தையும், இந்துமுஸ்லிம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.