கிருஷ்ணகிரி,மார்ச் 7- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டு தெருவில் வசித்து வந்த தம்பதிகள் சுரேஷ்-அம்மு. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூன்று ஆண் குழந்தைகள். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. சம்பவத்தன்றும், இருவருக்கும் தகராறு நடந்துள்ளது. இதில் மனமுடைந்த அம்மு தனது மூத்த 3 குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பின்பு, கடைசி இரண்டு பெண் குழந்தைகளான சுபிக்ஷா (7), ஆண் குழந்தை பீஷ்மர் (5) ஆகியோருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பிறகு, ஜோலார்பேட்டையிலிருந்து சேலம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் முன் தனது குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துறையினர் வழக்குப்பு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.