கிருஷ்ணகிரி, நவ.1- கிருஷ்ணகிரி மாவட்டம்,சூளகிரி வட்டம் கொத்தூரில் வசிக்கும் திருமலேஷ் மனைவி வசந்தா பிரசவத்திற்காக கடந்த 20 ஆம் தேதி உத்தனப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். மருத்துவர் இல்லாத நிலையில் செவிலியர்களே பிரசவம் பார்த்துள்ளனர். சுகப்பிரசவம் தான் என்றாலும் உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு தாய் சேய் இரு வரையும் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தவறான முறையில் பிரசவம் பார்த்ததால் இதனால் குழந்தைக்கு ஒரு கையில் இரண்டு இடத்தில் முறிவு ஏற்பட்டுள்ளது என்றும் குழந்தை கை முறிவு இங்கு குணப்படுத்த முடி யாது. மேல் சிகிச்சைக்கு வெளி மருத்துவ மனைக்கு தான் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இது குறித்து உத்தனப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், ஓசூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் பல முறை பேசியும் தீர்வு ஏற்படவில்லை. இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் உத்தனப்பள்ளி ஆரம்ப சுகா தார நிலையம் முன்பு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, குழந்தையின் கை முறிவுக்கு மேல் சிகிச்சை அளிக்க உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தவறாக மருத்துவம் பார்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டச் செயலாளர் முருகன் தலைமை தாங்கி னார். மாவட்டச் செயலாளர் இளவரசன், பொருளாளர் முருகன் பேசினர். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முருகேசன், செயலாளர் பிரகாஷ், பொருளாளர் எம்.எம்.ராஜூ, நிர்வாகிகள் சத்யநாராயணன், வேலு, மாதர் சங்க வட்ட செயலாளர் சரஸ்வதி, உட்பட கலந்து கொண்டனர். இதனையடுத்து, உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு தாயையும் குழந்தையும் அனுப்பி வைத்துள்ளனர்.