districts

img

கிருஷ்ணகிரி: சூறாவளியால் 300 மின்கம்பங்கள் சேதம்

கிருஷ்ணகிரி, மே 5- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றில் 300 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலை யில், அவ்வப்போது மின்வெட்டால் பொதுமக்கள் அவதி அடைந்து வரு கின்றனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக சூறாவளி காற்றுடன் பெய்யும் மழையால் பல பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி நகர் உட்பட பல இடங்களில், 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் பல பகுதிகள் இருளில் மூழ்கின.   இதுகுறித்து மின்வாரிய அதி காரிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக பராமரிப்பிற்காக மின்நிறுத்தம் செய்யப்படவில்லை. மேலும் கடந்த இரண்டு நாட்களாக அடித்த சூறாவளி காற்றினால் கிருஷ்ணகிரி நகரில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளன. மாவட்டம் முழுவதும் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு இதுவரை 300க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இவை அனைத்தும் மாற்றிமைக்கப்பட்டு, தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.