districts

கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்

கிருஷ்ணகிரி, மார்ச் 8- பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில்போடப்பட்ட கிருஷ்ணகிரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை விரி வாக்கப்பணிகள் தற்போது வேகம் எடுத்து வருகிறது. புதுச்சேரி, திண்டிவனம், திரு வண்ணாமலை, ஊத்தங்கரை, கிருஷ்ண கிரி, ஒசூர் வழியாக கர்நாடகா, மகா ராஷ்டிரா, கோவா, தில்லி உட்பட வெளி மாநிலங்களுக்கு செல்லும் சாலை திண்டிவனம்-திருவண்ணாமலை-ஒசூர் சாலையாகும். கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் வரை யில், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் ஒப்பந்தப் புள்ளி கள் கோரப்பட்டது. பல்வேறு பிரச்சனை களால் இத் திட்டம் தொடங்கிய சில மாதங்க ளிலேயே நிறுத்தப்பட்டது. சமூக ஆர்வலர் களும் அரசியல் கட்சிகளும் பலகட்டமாக போராடினர். ஆனாலும் அன்றைய அதிமுக அரசு கண்டுக்கொள்ளவில்லை. சாலைப் பணிகள் அரை குறையாக நின்றதால் சாலை சேறும், சகதியும், குண்டும் குழியுமாக மாறியது. இதனால், போக்கு வரத்து ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள்  பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.  கிருஷ்ணகிரியிலிருந்து ஊத்தங் கரை செல்வதற்கு பல மணி நேரம் வீண் விரையமானது. அடிக்கடி விபத்துகள்,உயிர்சேதமும், பொருட் சேதமும் ஏற்பட்டு வந்தது. சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ள வலியுறுத்தி பொதுமக்கள்தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தனர்.  இந்த நிலையில், தற்போது சாலை விரிவாக்க பணி துவங்கி வேகமாக நடந்து வருகிறது. மிக விரைவில் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.