districts

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேவை துவக்கம்

கிருஷ்ணகிரி, அக்.16-  கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளி யில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் மருத்துவ சேவை தொடங்கி வைக்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார்.  கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செல்லக்குமார், எம்எல்ஏ.க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர்.திருவாசகமணி வரவேற்றார். மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர்.நாராயணபாபு திட்ட விளக்கவுரையாற்றினார். பொது மக்களுக்கு மருத்துவ சேவையை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஒசூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரூ.100 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் நடை பெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட மக்கள் தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் 92 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று  மா.சுப்பிரமணியன் கூறினார்.

;