districts

img

மலைவாழ் மக்கள் சங்க பெயர் பலகை திறப்பு

கிருஷ்ணகிரி, ஜூலை 12- கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி யில் கெஸ்த்தூர், பசவனபுரம், காவேரிபுரத்தில்  தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் கிளை துவக்க நிகழ்ச்சிகள் பங்கேற்ற மாநில துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம் சங்கப் பெயர் பலகைகளை திறந்து வைத்து பேசினார். தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் பிரகாஷ் கொடி ஏற்றினார். வட்டச் செய லாளர்  கோவிந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்செட்டி வட்டச் செயலாளர் தேவராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி கர்ணன் உள்ளிட்ட பலரும் கலந்த கொண்டு உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேரவையில் மலை கிராமங்களில் வசிக்கும் இருளர், சோளகர், பழங்குடி மக்கள் கலந்து கொண்டனர் அஞ்செட்டி வட்டத்திலுள்ள 28 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் மலை மக்கள் கலந்து கொண்டனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டு முற்றிலும் சிதிலமடைந்த அனைத்து தொகுப்பு வீடுகளையும் இடித்துவிட்டு புதிதாக கட்டிக்கொடுக்க வேண்டும். சாதிச் சான்று கேட்டு விண்ணப்பம் செய்து காத்திருக்கும் பழங்குடியினர் அனைவருக்கும் உடனடியாக வழங்க வேண்டும், மூன்றாவது தலை முறையாக பயன்படுத்தி வரும் விவசாய நிலங்களுக்கும், குடியிருப்பு களுக்கும், 2006 தமிழக அரசின் வன உரிமை சட்டப்படி பட்டா  வழங்க வேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளனர்.