கிருஷ்ணகிரி, ஜூன் 3- ஊத்தங்கரை பாரத ஸ்டேட் வங்கி கிளை யில் பணம் செலுத்துதல் மற்றும் பணம் எடுப்ப தற்கான அனைத்து படிவங்களும் இந்தி மொழி யில் மட்டுமே இருந்தன. தமிழில் இல்லை. இத னால், படிவத்தை பூர்த்தி செய்ய முடியாமல் பல மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இந்நிலையில், இந்திமொழி படிவங்களை திரும்பப் பெறக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் இளவரசன், சிபிஎம் ஊத்தங்கரை வட்டச் செயலாளர் மகாலிங்கம், விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் அண்ணாமலை, நிர்வாகி முத்துக்குமார் ஆகியோர் வங்கி மேலாளரை சந்தித்து மனு அளித்தனர். தொடர்ந்து இந்தி மொழியிலேயே படிவம் விநியோகிக்கப்பட்டால் வங்கி முன்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்தனர்.