சென்னை,ஆக.16- மத்திய பாஜக அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இந்தி மொழி திணிப்பை தமிழக அதிமுக அரசு வேடிக்கை பார்த்து வருவதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செய லாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணி களில் தொடர்ந்து இந்தியைத் திணிக்கும் வேலையை மத்திய அரசு செய்து வரு கிறது. தபால் துறை, ரயில்வே துறை போன்ற வற்றில் வாரத்திற்கு ஒரு முறை புதிய சுற்ற றிக்கைகள் மூலமாக இந்தியைத் திணிக்கிற வேலையை செய்து வருகிறது. தமிழகத்தில் சமீபத்தில் நடந்த அஞ்சல் துறைத் தேர்வில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்வு எழுதலாம் என இருந்ததை மாற்றி இந்தி மற்றும் ஆங்கிலத் தில் மட்டுமே தேர்வு எழுத முடியும் என அறி வித்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய போராட்டத் தின் விளைவாகவும், தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் வலுவாக குரல் எழுப்பியதன் விளைவாகவும் அந்த தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. ரயில்வே துறையில் ரயில் நிலைய அதி காரிகள், உயரதிகாரிகளிடம் தகவல்களை பரிமாறுகிறபோது இந்தி மொழியில் மட்டுமே பரிமாற வேண்டுமென அறிவித்தது. கடும் எதிர்ப்புக்குப் பிறகு இந்த அறிக்கையை வாபஸ் வாங்கியது.
இந்நிலையில், ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு அனுப்பப்படும் சுற்றறிக்கை இனிமேல் இந்தி மொழியில் மட்டுமே அனுப்பப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இதுவரையிலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் ரயில்வே பாது காப்புப் படையினருக்கு அனுப்பப்பட்டு வந்த அறிவுரைகள் மற்றும் உத்தரவுகள் அனைத் தும் இனிமேல் இந்தி மொழியில் மட்டுமே அனுப்பப்படும். தமிழகத்தில் ரயில்வே பாது காப்புப் படையில் பெரும்பாலும் தமிழர்களே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் இந்த உத்தரவு ரயில்வே பாது காப்பில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு களை ஏற்படுத்தும். எனவே ரயில்வே பாதுகாப்புப் படையின ருக்கு இந்தியில் மட்டுமே சுற்றறிக்கை அனுப் பப்படும் என்கின்ற உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே உள்ள அந்தந்த மாநில மொழிகளில் சுற்றறிக்கை அனுப்பும் நடைமுறையைத் தொடர வேண்டு மென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு மத்திய அரசை வலி யுறுத்துகிறது.
மத்திய அரசு, மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் மீண்டும் மீண்டும் இந்தி யைத் திணிக்கும் இழிவான செயலை மேற் கொண்டு வருகிறது. இதை வலுவாக எதிர்க்க வேண்டிய தமிழக எடப்பாடி அரசு மத்திய அரசின் அடிமை போன்று கள்ளமௌனம் சாதிக்கிறது. தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதற்கும், ஊழல் வழக்குகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும் அதிமுக அரசு தமிழக மக்களின் நலன்களை, உரிமைகளை மத்திய அரசிடம் காவுகொடுத்து வருகிறது. எனவே தமிழர்களின் மொழி உரிமையைப் பறிக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதி ராக வலுவான குரலெழுப்பிட முன்வர வேண்டு மென தமிழக இளைஞர் சமூகத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.