districts

img

தனியார் நிறுவனத்தில் குறைந்தபட்சமாக ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க கோரிக்கை

கிருஷ்ணகிரி, மார்ச் 1- தனியார் நிறுவனங்களில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்கக் கோரி தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் ஓசூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.செயலாளர் சுகுமாரன், பொருளாளர் தேன்சாமி, பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஓசூர் பகுதியில் சிட்கோ, சிப்காட் 1, 2, தனியார் தொழிற்பேட்டைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் 2 லட்சம் தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்கின்றனர். கடந்த 10 ஆண்டு களில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். பல தொழிற் சாலைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 40 ஆண்டுகள் பணிபுரிந்து 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இதுவரை பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 500 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை மட்டுமே ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். அரசின் சலுகை களும் நலத்திட்டங்களும் எதுவும் கிடைக்காமல் அவதிப்பட்டு வரு கின்றனர். எனவே குறைந்தபட்சமாக ஓய்வூதியத்தை 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும், இடைக்கால நிவாரணமாக மக்களவையில் நிய மிக்கப்பட்ட பகத்சிங் கோசாரியா குழு பரிந்துரைத்த மாதம் 3,000 ரூபாய் என்பதை உடனே வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி வழங்க வேண்டும், ஓய்கூதியர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் உள்ள மேல் முறையீடு, சீராய்வு மனுக்களைத் திரும்பப்பெற வேண்டும், 1.9.2014-க்கு பிறகு பணி ஓய்வு பெற்றவர்களுக்கு கேரள உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படை யில் 12 மாத சராசரி ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழக அரசு கேரளாவைப் போல் ஈபிஎஸ் 95 ஓய்வூதியர்களுக்கு மாநில நல ஓய்வூதியம் மாதம் 1,600 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.