districts

img

விவசாய நிலம் பாதிக்கப்படாமல் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆய்வு

கிருஷ்ணகிரி, ஜூன் 17-  ஓசூர் இடையநல்லூர்,எடப்பள்ளி சூதாளம் பகுதிகளில் சிறு குறு விவ சாயிகளின் நிலங்களில் விவசாயிகள் அனுமதி பெறாமல் குழாய் பதிக்கும் திட்டத்தை கெயில் நிறுவனத்தினர் துவக்கினர்.

அதை எதிர்த்து பாதிக்கப்படும் விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கடந்த 12 ஆம் தேதி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நடந்த காத்தி ருப்பு போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் தலையிட்டு 3 நாட்களுக்குப் பின் பாதிக்கப்பட்ட நிலத்தை ஆய்வு செய்வதாக கூறினார்.  

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி ஓசூர் சாராட்சியர் பிரியங்கா,மற்றும் கெயில் குழாய் பதிக்கும் திட்ட அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட நிலங்களை நேரில் பார்வையிட்டனர். அதேநேரத்தில் பாதிக்கப்படும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் சாலை ஓரமாக மாற்று வழியில் இந்த திட்டத்தை செயல்படுத்தமுடியும் என்பதையும் சுட்டிக்காட்டினர். ஓசூர் சாராட்சியர் பிரியங்கா கெயில் குழாய் பதிக்கும் திட்ட அலுவலர்கள் சுமார் 2 மணி நேரம் ஆய்வு செயதனர்.

அதன் அடிப்படையில் சிறு குறு விவசாயிகளின் நிலம் பாதிக்காமல் கெயில் குழாய் திட்டத்தை மாற்றுப் பாதையில் எடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து நல்ல முடிவு எடுக்கப்படும் என சாராட்சியர் பிரியங்கா விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.