districts

லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர்கள் கைது

கிருஷ்ணகிரி,பிப் 14- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் கண்காணிப்பாளர் வடிவேல் தலைமையில் சோதனை நடைபெற்றது. ஒரு மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு பிறகு பாகலூர் சாலையில் இயங்கி வரும் தனியார் மழலையர்  பள்ளிக்கு  கட்டிடம் கட்ட அனுமதிக்காக ரூ.42,000  லஞ்சம் வாங்கிய ஓசூர் வட்டாட்சியர் கவாஸ்கர்,துணை வட்டாட்சியர் மங்கையர்கரசி ஆகியோரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.