கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி ஜூஜூவாடியில் ரூ. 2 கோடியே 50 லட்சத்தில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு அடித்தளம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி வெள்ளியன்று (டிச. 9) ஆய்வு செய்தார். ஆணையர் பாலசுப்ரமணியன், மாநகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.