districts

img

மலைவாழ் பழங்குடி மக்களின் வன உரிமையை பாதுகாக்ககோரி ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி,ஜூலை 22- மலைவாழ் பழங்குடி இருளர் மக்களின் 4000க்கும் மேற்பட்ட சிதிலமடைந்த தொகுப்பு வீடுகளை உடனடியாக சீரமைக்ககோரி தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மலைவாழ் பழங்குடி மக்களின் வன உரிமையை பாதுகாக்ககோரி நடைபெற்ற போராட்டத்தில் மாநிலச் செயலாளர் டி.ரவீந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர். சேகர்  ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். 

மாவட்டத் தலைவர் முருகேசன், பொருளாளர் எம்.எம்.ராஜு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன்,முன்னாள் வட்டச் செயலாளர் வெங்கடேஷ் மாவட்ட குழு உறுப்பினர்கள் சீனிவாசன் தேவராஜன் ஒன்றிய தலைவர் சிவப்பா கோவில் நிலத்தில் குடியிருப்போர் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலாளர் அனுப்பா, உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட மலைவாழ், பழங்குடி மக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக மனுக்களை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.