districts

img

ஹட்சன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 11- பாலக்கோட்டில் உள்ள ஹட்சன் பால் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் சங்கம் ஆரம்பித்ததற்காக நிர்வாகம் தொழி லாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தாமல் வேலை நீக்கம் செய்வது, மிகக் குறைந்த ஊதியத்தில் வட மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்ல ஆணையிட்டும், தொழிற்சாலைக்குள் தொழிலாளர்களை பணிக்கு அனுமதிக்கா மலும் பழி வாங்கி வருகிறது. நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து கடந்த பல மாதங்களாக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் ஹட்சன் பால் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து ஓசூர் ரயில் நிலையம் அருகே சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் பீட்டர், கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் பி.ஜி.மூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் வாசுதேவன், கிருஷ்ணன், முருக நாயனார், கஸ்தூரி, பார்வதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.