districts

img

மக்களின் வாழ்வாதார கோரிக்கைக்காக ஓசூரில் சிபிஎம் நடைபயணம்-மறியல்

கிருஷ்ணகிரி, ஜன. 30- ஓசூர் மக்களின் அடிப்படை வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர, ஒன்றிய குழுக்கள் சார்பில் கெலவரப்பள்ளியிலிருந்து பிரச்சார நடை பயணம் ஒன்றியச் செய லாளர் ராஜா ரெட்டி, மாநகரச் செய லாளர் சிபி.ஜெயராமன் ஆகியோர் தலைமையில் புறப்பட்டது.மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் துவக்கி வைத்தார். ஓசூர் மாநகரப் பகுதிகளிலுள்ள சாலையோர சிறுகடைகள், தள்ளுவண்டி கடைகளை உயர் நீதிமன்ற ஆணையை மீறி அப்புறப் படுத்துவதை கைவிட வேண்டும், வரி என்ற பெயரில் அடாவடியாக மாமூல் வசூலிப்பதை தடுக்க வேண்டும், முறையான வெண்டிங் கமிட்டி அமைக்க வேண்டும், மாநகர் முழுவதும் மக்களுக்கு சாலை, கழிவுநீர், தெரு விளக்கு வசதி களை ஏற்படுத்த வேண்டும், சப்பலம்மா கோயிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை தனியார் ஆக்கிர மிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓசூர் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனை யாக அறிவித்து, மேம்படுத்த வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேலாக மூடிக் கிடக்கும் மத்திகிரி சமு தாயக்கூடத்தை மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், புறம் போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடி யிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும், காவல் ஆணையர் அலுவலகம் ஏற்படுத்த வேண்டும்,

ஒன்னல்வாடியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் வீடுகளை சாலை விரிவாக்கத்திற்காக அகற்றும் முன்பு மாற்று இடம் வழங்க வேண்டும், புனுகன் தொட்டி சித்தன்னபள்ளி கிராமங்களில் சுடுகாட்டிற்கு நிலம் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபயணம் நடைபெறுகிறது. அனுமதி மறுப்பு நடைபயணம் துவங்கியவுடன் காவல்துறையினர் அனுமதி இல்லை எனக் கூறி தடுத்தனர். இதை யடுத்து அதே இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வட்டாட்சியர் கவாஸ்கர், வருவாய் அலுவலர் சுப்பிரமணி, தனி வட்டாட்சியர் செந்தில் ஆகியோர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்பதாக எழுத்து பூர்வமாக அளித்ததை தொடர்ந்து நடைப்பயணமும், மறியலும் கைவிடப்பட்டது. இதில் செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,பிரகாஷ், சுரேஷ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் நாராயண மூர்த்தி, ஸ்ரீதர், ரேகா நிர்வாகிகள் திம்மா ரெட்டி, தேவராஜ், நாராயணசாமி, பி.ஜி.மூர்த்தி எம்.எம்.ராஜூ, வெண்ணிலா, நாகேஷ்பாபு, ரவி, அனுமந்தராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.