கிருஷ்ணகிரி, ஏப் 6- 1979இல் ஓசூரில் சிப்காட் மற்றும் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகு லிட்டில் இங்கிலாந்து என்று அழைக்கப்பட்ட தளி என்ற பெயர் தமிழ்நாட்டில் வெளிச்சத்துக்கு வந்தது. ஒன்றிணைந்த தர்மபுரி மாவட்டமாக இருந்தபோது தளி மிகச் சிறிய ஊராட்சியாக இருந்தது. தற்போது பேரூராட்சியாகவும் ஊராட்சி ஒன்றியத்தின் தலைமை இடமாகவும், சட்டமன்ற தொகுதியாகவும் உள்ளது. தளியை சுற்றி 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி கள், 2 கல்லூரிகள், அரசு மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இங்கு சிறு, குறு நடுத்தர தொழிற்சாலைகள் வேகமாக பெருகி வரு கின்றன. இதன் காரணமாக தளியின் தட்பவெப்பமே தலைகீழாக மாறியுள்ளது. 2016ஆம் ஆண்டு ஜெயல லிதா முதல்வராக இருந்த போது, இங்கு பேருந்து நிலையம் கட்டப்பட்டது. ஆனால் முறையான பரா மரிப்பு இல்லாததால் தற் போது பேருந்து நிலையத் தின் மேற்கூரை சேத மடைந்து காணப்படுகிறது. போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வெடுக்கும் அறையும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. எனவே மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு பேருந்து நிலையத் தையும், கழிப்பறைகளை யும் முறையாக பரா மரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மூடிக் கிடக்கும் கிராமப்புற நூலகம், வட்டார கல்வி அலுவலகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தளி ஒன்றியச் செயலாளர் வெங்கடேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.