districts

img

ஓசூரில் மாநகராட்சியின் முதல் மேயராக எஸ்.சத்யா பதவியேற்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 4- நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஓசூர் மாநகராட்சியில் வெற்றிபெற்ற 45 வார்டு உறுப்பினர்கள் கடந்த 2ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். மாநகராட்சி மேயர் பதவிக்கான மறை முகத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 23ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சத்யா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்ய ப்பட்டார். மேயராக தேர்ந்தெடுக்க ப்பட்ட எஸ்.ஏ.சத்யா 2001 முதல் 2006 வரை ஓசூர் நகரமன்ற உறுப்பினரா கவும், 2006 முதல் 2011 வரை நகராட்சித் தலைவராகவும் செயல்பட்டார். கடந்த 2019இல் நடைபெற்ற ஓசூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று திமுக சட்டமன்ற உறுப்பினரகாவும் இரண்டரை ஆண்டுகள் செயல்பட்டார்.  ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயராகவும் அவர் தேர்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.