districts

img

சாதி ஆணவ படுகொலை வழக்குகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி, டிச. 13- கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியத்தில் தலித் மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகள், ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ஓசூர் வட்டம் பாகலூர் அருகே சூடுகொண்டபள்ளியைச் சேர்ந்த நந்திஸ் சுவாதி, கல்கேரி ஆலய நுழைவு போராட்டத்தில் முன் நின்ற சுரேஷ், மதகொண்டபள்ளி சசிகுமார் உட்பட 16க்கும் ஆணவத்திற்கு பலியானார்கள். சில வழக்குகள் மட்டுமே பதியப்பட்டு நடைபெற்று வரு கிறது. பல வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இடதுசாரி கட்சிகளின் தொடர் போராட்டத்தின் விளைவாக நந்திஸ் சுவாதி, சுரேஷ், சசிகுமார் வழக்குகள் மெதுவாக நகர்ந்து வருகிறது. இந்த வழக்குகள் குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் தலைமையில் ஆயவுக் கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் நாகேஷ்பாபு, தலைவர் ஆனந்தகுமார், துணைத் தலைவர் இருதயராஜ், துணைச் செயலாளர்கள் முத்து, நாராயணமூர்த்தி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ரவி, முருகேஷ், வெங்கடேஷ், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சூடுகொண்டபள்ளி நந்தி சுவாதி, கல்கேரி சுரேஷ், மதகொண்ட பள்ளி சசிகுமார் ஆணவப் படு கொலை வழக்குகளை மேலும் இழுத்தடிக்காமல் விரைவாக முடித்து அந்த குடும்பங்களுக்கு நீதி வழங்க வேண்டும். சூளகிரி வட்டம் உத்தனபள்ளி அருகே சாணமாவு கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி திராவிட மக்களுக்கு தமிழக அரசு கொடுத்த நிலத்தின் மீதான வழக்கில் தமிழக அரசும், ஆதி திராவிடர் நலத்துறையும், தலை யிட்டு விரைந்து முடித்து வீட்டுமனை களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.