கிருஷ்ணகிரி, டிச. 4- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்திற்கு, கர்நாடகா மாநிலத்தில் உள்ள பன்னார்கட்டா தேசிய பூங்கா மற்றும் காவிரி வன உயிரின சரணாலயத்தில் இருந்து கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் வந்த யானைகள், தளி, ஜவளகிரி, நொகனூர், தேன்கனிக் கோட்டை, ஊடேதுர்க்கம், சானமாவு, மகராஜகடை மற்றும் வேப்பனபள்ளி பகுதிகளில் உள்ள காப்புக்காடுகளில் முகாமிட்டு, விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியும் வருகின்றன. குறிப்பாக ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊடே துர்க்கம் காப்புக்காட்டில் 50 யானை கள், ஓசூர் - சானமாவு காப்புக் காட்டில் 3 யானைகள், தேன்கனிக் கோட்டை - நொகனூர், தேன்கனிக் கோட்டை, அய்யூர் காப்புக்காடுகளில் 35 யானைகள், ஜவளகிரி - தளி, ஜவளகிரி, பனை, உளிபண்டா காப்புக் காடுகளில் 65 யானைகள், கிருஷ்ணகிரி - மகா ராஜகடை, வேப்பனபள்ளி காப்புக்காடுகளில் 8 யானைகள் முகாமிட்டுள்ளது. அஞ்செட்டி - பனை, அஞ்செட்டி, உடுபுராணி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு காப்புக்காடுகளில் 35 யானைகள், உரிகம், தக்கட்டி, கெஸ்தூர், மல்லஹள்ளி காப்புக்காடு களில் 75 யானைகள் என மொத்தம் சுமார் 250 யானைகள் முகா மிட்டுள்ளன. இவ்வாறு முகாமிட்டுள்ள யானைக் கூட்டமானது பகல் நேரங்களில் காப்புக் காடுகளில் தங்கியும், இரவு நேரங்களில் காப்புக் காட்டை விட்டு வெளியேறியும், சில நேரங்களில் பகல் முழுவதும் காப்புக்காட்டிற்கு வெளியில் புறம்போக்கு நிலங்களில் முகாமிட்டும், அருகிலுள்ள கிராம விவசாய நிலங்களுக்குள் சென்று ராகி, நெல், வாழை, தக்காளி, சோளம் மற்றும் தென்னை உள்ளிட்ட பயிர் வகைகளை உண்டும், சேதப்படுத்தியும் வருகின்றன. யானைக்கூட்டங்களை சம்பந்தப்பட்ட வனப் பணியாளர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள், அதிவிரைவு மீட்பு குழுவினர் மீண்டும் அவை களை பாதுகாப்பாக காப்புக் காடு களுக்கு அனுப்பி, உயிர் சேதம் மற்றும் பெருமளவு பயிர் சேதங்கள் ஏற்படாமல் தடுத்து வருகின்றனர்.
மேலும், வனப்பணியாளர்கள் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வேட்டைத் தடுப்பு வாகனங்களில் ஒலிப்பெருக்கிகள் மூலம் பொது மக்கள் காப்புக் காட்டுக்கு கால்நடை களை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம் எனவும், காப்புக் காட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு இரவு காவலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், விறகு போன்ற எரிபொருட்கள் சேகரிக்க செல்ல வேண்டாம் எனவும், இரவு நேரங்களில் காப்புக்காட்டினை ஒட்டியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் யாரும் நடமாட வேண்டும் எனவும், இரவு நேரங்களில் வீட்டின் வெளி யில் மின் விளக்குகளை ஒளிரச் செய்யு வும் என பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், விவசாய நிலங்களை சுற்றி மின்வேலி அமைப்பதை தவிர்க்க வும், அவ்வாறு மின்வேலி அமைப்பது கண்டுபிடிக்கப்பட்டால், வன உரி யின பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வன உயிரினங்களால் ஏற்படும் பயிர் சேத விவரங்களை, சம்பந்தப்பட்ட வனச்சரக சரக அலுவலகங்களில் தெரி விக்கும்பட்சத்தில் வனத்துறை மூலம் விரைவில் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.