districts

img

மர்ம நபர்கள்  விட்டுச் சென்ற ஒட்டகங்கள்

சூளகிரி, ஏப். 4- ஒசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஒரம் கோபசந்திரம் பகுதியில் 5 ஒட்ட கங்களை கட்டி வைத்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து சூளகிரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த னர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஒட்டகங்களை மீட்டு வரு வாய்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஞாயிற்றுக்கிழமை வரை அந்த ஒட்டகங்களை தேடி யாரும் வராத தால், திங்கட்கிழமை அந்த 5 ஒட்டகங் களையும் மாவட்ட கால்நடை துறையின ரிடம் ஒப்படைத்தனர். இந்த ஒட்டகங்களை அதன் உரிமை யாளர்கள் யாராக இருந்தாலும் உரிய ஆவ ணங்களை சமர்ப்பித்து கூட்டிச் செல்ல லாம் என்று அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து 5 ஒட்டகங்களையும் சூளகிரி பகுதிக்கு பலி கொடுப்பதற்காக கொண்டு வந்தார்களா அல்லது வேறு எதற்ககாக கொண்டு வந்தார்கள் என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;