கிருஷ்ணகிரி, பிப். 3- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சூளகிரி வட்டங்களுக்கு உட்பட்ட பகுதியில் ஓசூர் சிப்காட் பகுதி 5-க்கு வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஓசூர் கெலமங்கலம், ஓசூர்-சூளகிரி சாலைகளுக்கு இடைப்பட்ட உத்தனப்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதி களில் ஓசூர் சிப்காட் பகுதி 5க்கு 3,250 ஏக்கர் வரை விவசாய நிலங்களை கையகப்படுத்துவதாக அரசு அறி வித்துள்ளது. இதனையடுத்து, உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாக மங்கலம் ஆகிய ஊராட்சிகளில் வரு வாய்த்து துறையினர் நிலத்தை பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலம் அனைத்தும் தென்பெண்ணை ஆற்று பகுதியிலும், அதன் கால்வாய் பாசன பகுதிகளிலும் உள்ள செழிப்பான விவசாய நிலங்களாகும். அதேபோல், தேன்கனிக்கோட்டை, ஓசூர், சூளகிரி வட்டங்களில் உள்வட்ட சாலைக்கு என்று 10,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட் டுள்ளது, பாரத் பெட்ரோலியம் ஐடிபிஎல் குழாய் பதிப்பு திட்டத்திற்கு 22,000 ஏககர் நிலம், கையகப்படுத்துவதற்கு கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வரு கின்றன. இவ்வாறு விவசாய நிலம் பல துறைகளுக்கு கையகப்படுத்தப்பட்டால் விவசாய நிலம் சிறிதும் மிஞ்சாது என்ற நிலை ஏற்படும்.
இந்நிலையில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்படும் விவசாயிகளின் சிறப்பு ஆலோசனை கூட்டம் உத்தனப்பள்ளியில் மாநிலச் செயலாளர் பி.டில்லிபாபு தலை மையில் நடைபெற்றது. சூளகிரி வட்டத் தலைவர் எம்எம் ராஜூ முன்னிலை வகித்தார். மாவட்டச் செய லாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஆர்.ஜி.சேகர், சங்கத்தின் வட்டச் செயலாளர் முனியப்பா, தேன்கனிக்கோட்டை வட்டச் செய லாளர் அனுமப்பா, ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இந்த கூட்டத்தில், சிப்காட்டிற்காக விவசாயிகளின் நிலத்தை கையப்படுத்தக்கூடாது என்று வலி யுறுத்தி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மார்ச் 7ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், டில்லி பாபு பேசுகையில், “ விவசாயிகளை, விளை நிலத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது, செயல்படுத்தவும் அனுமதிக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் தற்போது, சிப்காட் 5 திட்டத்திற்கு செழிப்பான விவசாய நிலம் 3,250 ஏக்கர், 25 கிராமங்கள், விவசாயிகளின் குடி யிருப்புகள் அனைத்தையும் அழித்து கையகப்படுத்தும் முயற்சிக்கு கண்டனம்” தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட விவ சாயி களிடம் முதல்வர் அளித்த வாக்குறுதி யின் அடிப்படையில், விவசாய நிலங்கள் எதையும் விவசாயிகள் அனு மதியின்றி கையகப்படுத்தக் கூடாது என்றும் மலைப்பகுதியிலும் அரசு புறம்போக்கு நிலத்தில் சிப்காட் அமைத்துக் கொள்ள எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் கூறினார்.