districts

img

சாலைக்காக வீடுகளை இடிக்கும் முன் மாற்று குடியிருப்பு வழங்கிடுக

கிருஷ்ணகிரி, ஜன. 11- ஓசூர் வட்டம், உத்தனப்பள்ளி சாலை யில் உள்ள ஒன்னல்வாடியில் கடந்த 10 ஆண்டுகளில் சாலை விரிவாக்கத்திற்காக மேலும் 40க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட உள்ளன. 70 ஆண்டுகளுக்கும் மேலாக மூன்றாவது தலைமுறையாக அவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். 1998 மே மாதம் இங்குள்ள 26 பேருக்கு தமிழக அரசு வீட்டு மனை பட்டா வழங்கியது. ஆனால் இதுவரை நிலம் கையகப்படுத்தி வழங்கப்பட வில்லை. இந்நிலையில் இங்கு சாலை விரிவாக்கத்திற்கு நோட்டீஸ் வழங்கப் பட்டு, மின் இணைப்புகளும் துண்டிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் உடனடியாக புதிய மாற்று குடியிருப்புகள் வழங்கி விட்டு வீடு களை இடிக்க வேண்டும், அதே பகுதி யில் பல தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்தி ருக்கும் அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தை மீட்டு, 1998இல் அரசால் ஒன்னல்வாடி மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்களுக்கான நிலத்தை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை மையில் கிராம மக்கள் ஓசூர் சாராட்சியர் சரண்யாவிடம் மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மனுவை பெற்றுக் கொண்ட சாராட்சி யர் சாலை விரிவாக்க்கத்திற்காக ஒன்னல்வாடி யில் இடிக்கப்படும் வீடுகளுக்கு மாற்றாக குடிசை மாற்று வாரிய வீடுகளில் குடிய மர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதில் கட்சியின் ஒன்னல்வாடி கிளைச் செயலாளர் அந்தோணி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் ஒன்றியப் பொருளாளர் கிருஷ்ணதேவராஜ், வட்டத் தலைவர் திம்மாரெட்டி, சேகர், லட்சுமம்மா, சகாய மேரி, சென்வீரப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.