districts

img

அக்னிபாத் திட்டத்தை கைவிடுக: ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள்

கிருஷ்ணகிரி, ஜூன் 21- ராணுவத்திற்கு ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் 8ஆவது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் சரவணன் தலை மையில் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.  துணைத் தலைவர் ஜேம்ஸ் குமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். செய லாளர் கோபாலகிருஷ்ணன் வேலை அறிக்கை யையும், பொருளாளர் கோவிந்தன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சந்திரன், செயலாளர் நடராஜன், டிஎன்ஆர்ஓஏ மாவட்டத் தலைவர் சக்திவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநில துணை தலைவர் ஆறுமுகம் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் சென்னப்பன் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் கார்த்திக்குமார் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்
அரசு விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 6 மணிக்கு மேல் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். கால அவகாசம் அளிக்கா மல் வாட்ஸ்அப், மின்னஞ்சல் வழியாக உடனுக்குடன் புள்ளிவிவரம் போட வலியுறுத்துவதை கைவிட வேண்டும், போச்சம்பள்ளி, அஞ்செட்டி ஊராட்சி ஒன்றி யங்களை விரைந்து பிரிக்க வேண்டும்.  ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் ராணுவ வீரர்களை எடுக்கும் நட்வடிக்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
தலைவராக சரவணன், செயலாளராக கோபாலகண்ணன், பொருளாளராக கோவிந்தராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.