districts

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தல்

காஞ்சிபுரம், ஜூலை 31 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பெரும்புதூர் 4ஆவது வட்ட மாநாடு  திருப்பெரும்புதூரில்  நடைபெற்றது.           வட்டக்குழு துணைத் தலைவர் ஆர்.சுகுந்தன் தலைமையில் வட்டக்குழு து.செயலாளர் மணிகண்டன் வரவேற்க, வட்டக்குழு உறுப்பினர் ஜி.மலர்கொடி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.வட்டச் செயலாளர் கே.செல்லப்பன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.எல்.காத்திக் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர்கள் பா.வடிவேலன், எம்.தினகரன், விவசாய சங்க நிர்வாகி எஸ்.ஆனந்தன், சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் வி.சண்முகபாபு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலாளர் எஸ்.உதயகுமார் நிறைவுரையாற்றினார். திருப்பெரும்புதூர் கிளை நூலகத்தை புதிய கட்டிடம் கட்டி மேம்படுத்த வேண்டும், பண்ணூர் கூட்டுச்சாலையிலிருந்து காந்தூர் வரை மின்விளக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும். சென்னை தேசிய நெடுஞ்சாலை யில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய  மேம்பாலம் பணியை உடனே துவக்க வேண்டும், காந்தூரில் வசிக்கும் குடும்பங்க ளுக்கு குடிமனைப்பட்ட வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாவட்டச் செயலாளர் எஸ்.உதயகுமார் நிறைவுரை யாற்றினார். மாநாட்டில்  வட்டத் தலைவராக கே.செல்லப் பன், செயலாளராக ஆர்.சுகுந்தன், பொருளா ளராக ஏ.வி.ரமேஷ் உள்ளிட்ட 9 பேர்  கொண்ட வட்டக்குழு தேர்வு செய்யப் பட்டது.