காஞ்சிபுரம், ஜூலை 18- காஞ்சிபுரத்தில் வியாழனன்று நடை பெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் அமைச்சர்கள் சுவாமிநாதன், அன்பரசன் ஆகியோர் கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து மாநில அளவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு காசோலை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவில் ஆட்சியர் கலைச்செல்வி, மக்களவை உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலரசன், சுந்தர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அரசு செயலாளர் ராஜா ராமன், மேயர் மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன் தலைமையில் தமிழ்நாடு வாழ்வும் வரலாறும் , சென்னை மீட்பும் வரலாறும், தமிழ்நாடு பெயர் மாற்ற போராட்ட வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கருத்தரங்குகள் நடை பெற்றது. முன்னதாக அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.A