சோமங்கலம்,டிச.4- காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே உள்ள கட்ரம்பாக்கம் பகுதியில் சவுத்ரி கால்வாயில் தொடர்ந்து மண் திருடப்படுவதாக மணிமங்கலம் காவல்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து கட்ரம்பாக்கம் ஏரி கால்வாயில் மண் திருடுபவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர். போலீசாரை கண்டதும் ஏரி கால்வாய் பகுதியில் இருந்த 6 பேர் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் காட்ரம்பாக்கம் பகுதியை சேர்ந்த அரசகுமார் (வயது 29), பழனி (36), மகேந்திரன் (38), செல்வகுமார் (35), சக்திவேல் (42), கோவிந்தராஜ் (51) என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து, மண் அள்ள பயன்படுத்திய 7 பொக்லைன் எந்திரங்கள், 2 டிப்பர் லாரி போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.