காஞ்சிபுரம், மார்ச் 12- காஞ்சிபுரம் மாவட்டத் தில் நெல், கரும்பு, வேர்க் கடலை காய்கறிகள் என பல்வேறு விளைப் பயிர்கள் பயிரிடப்படுகிறது. அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள பயிர்களை, காட்டு பன்றிகள் இரவில் கூட்டமாக வந்து சேதப்படுத்தி விடுகிறது. எனவே காட்டு பன்றிகளை விரட்டிட வேளாண் துறை அலுவலர்கள் கூறும் வழி முறைகள் பின்பற்றியும் பன்றிகளை விரட்டியடிக்க முடியாத நிலை ஏற்பட்டு ள்ளது. இதனால் பயிர்கள் விளைந்தும் அறுவடை செய்ய முடியாமல் விவசா யிகள் பாதிக்கப்பட்டுள்ள னர். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வனத் துறை மூலம் நிவாரணம் கிடைக்க உரிய நடவ டிக்கை எடுக்கவும், மேலும் உணவு தானிய பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை வனத்துறையி னர் மூலமாக சுட அரசு உத்த ரவு உள்ளது. இந்நிலையில் உணவு பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை சுட சிறப்பு அனுமதியை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் காஞ்சி புரம் மாவட்டக்குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.