காஞ்சிபுரம், மே 28- காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஆத்மா தொண்டு நிறுவனம் இணைந்து பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே பொது மக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் மஞ்சப்பை தேவை குறித்து கலைநிகழ்ச்சி மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடை பெற்றது. இதில் கிளி ஜோசிய குறு நாடகம் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடுகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.