காஞ்சிபுரம்,மே 5- படப்பை அருகே 300 எக்டேர் அரசு புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்த ஏழைகளின் குடியிருப்புகளை வலுக்கட்டாயமான இடித்து தகர்க்கப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம், படப்பையை அடுத்த சாலமங்கலம் ஊராட்சிக் குட்பட்டது நரியம்பாக்கம் கிராமம். இங்கு 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றன. தற்போது நரியம்பாக்கம் கிராமத்தி லுள்ள அனைவரும் ஆக்கிரமிப் பாளர்கள் என்ற முத்திரை குத்தி ஒரு வாரத்தில் இரண்டு முறை நோட்டீஸ் கொடுத்துள்ளது வருவாய்த்துறை. இதனால் வீடு இடிக்கப்பட்டு விடுமோ என்ற பயம் மற்றும் மன உளைச்சலால் நரியம்பாக்கம் சுபலட்சுமி கடந்த மாதம் 30 ஆம் தேதி வீட்டில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டார். இது தொடர்பாக திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் விசா ரணை நடத்தினார். அப்போது, அரசு அதிகாரிகள் கொடுத்த நோட்டீஸ் தான் சுபலட்சுமி தற்கொலைக்கு காரணம் என சுபலட்சுமியின் பெற்றோர், கணவர், கிராம மக்கள் அனைவரும் புகார் தெரிவித்தனர். இதற்கிடையில், சுபலட்சுமியின் உடல் கூராய்வு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் முடிந்ததும் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க காவல்துறை முன்வந்தது. அப்பொழுது சுபலட்சுமியின் மரணத்திற்கு நீதி கேட்டும், சம்பவ இடத்திற்கு திருப்பெரும்புதூர் கோட்டாட்சியர் வரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியரிடம், சுபலட்சுமியின் 2 குழந்தைகளுக்கும் நிவாரணமாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும். நரியம்பாக்கம் கிராமத்தின் மேய்க்கால் புறம் போக்கு நிலத்தை நீர்ப்பிடிப்பு என்று நோட்டீஸ் கொடுத்து கிராம மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக் கையை அரசு கைவிட வேண்டும் என்றும் கோரிக்கையை முன் வைத்த னர். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சி யரிடம் பேசி தீர்வு காணப்படும் என்று கோட்டாட்சியர் உறுதி அளித்த தன் அடிப்படையில் சுபலட்சுமியின் உடலை அவரது உறவினர்கள் பெற் றுக் கொண்டு அடக்கம் செய்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி. சங்கர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:- இனியும் இது போன்ற சம்ப வங்கள் நடைபெறாமல் இருக்க, அரசு ஆவணங்களிலுள்ள விவரங் களை மட்டும் வைத்து கொண்டு முடிவு செய்வதற்குப் பதிலாக உண்மையிலேயே இப்போது அந்த இடம் நீர்நிலையாக இருக்கிறதா? ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலம் தானா? என்பதை கள ஆய்வு செய்ய வேண்டும். அதன்பிறகுதான், அரசு ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஏழை மக்கள் நீண்ட காலமாக வசித்து வருவதால் வகை மாற்றம் செய்து ஆவணங்களிலும் மாற்றம் செய்து நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். இப்போதும் நீர்பிடிப்பு பகுதி நீர் நிலைகளில் குடியிருப் பவர்களுக்கு மாற்று இடத்தில் குடிமனை வழங்கி நிரந்தரமான தீர்வு ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக் கிறார்.