படப்பை, அக். 7- காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த தேவரியம் பாக்கம் பகுதியில் தனியார் கேஸ் சிலிண்டர் குடோனில் வீட்டுக்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர்கள் வைக்கப் பட்டிருந்தது. இந்த குடோனில் கடந்த 28-ந்தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கியாஸ் சிலிண்டர்கள் வெடிக்க தொடங்கியது. இந்த தீ விபத்தில் மொத்தம் 12 பேர் படுகாயம் அடைந்த னர். 12 பேரில் சிகிச்சை பலனின்றி ஆமோத்குமார் (வயது25), சந்தியா (21), ஜீவானந்தம் (50), குடவாசல் பகுதியை சேர்ந்த குணால் (22), தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த கிஷோர் (13), சண்முகப்பிரியன் (17), கோகுல் (22), குடவாசல் பகுதியை சேர்ந்த அருண் (23) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் தீ விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த தமிழர சன் (11), சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கேஸ் சிலிண்டர் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.