districts

காட்டுப்பன்றிகளால்  பயிர் நாசம்

காஞ்சிபுரம்,அக்.9-  காஞ்சிபுரம் மாவட்டம், ஆரிய பெரும்பாக்கம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட துலங்கும் தண்ட லம் கிராமத்தில் சுமார் 150 ஏக்கரில் நெற்பயிர் கள், கடலை பயிரிடப் பட்டுள்ளது.  அறுவடை செய்ய இன்னும் 20 தினங்களே உள்ள நிலையில் காட்டு பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டமாக வந்து விவசாய நிலங்களில் நெல், கடலை பயிர்களை நாசம் செய்கின்றது. காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வழி இன்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஏற்கனவே விவசாய இடுப்பொருள்களின் விலை ஏற்றம், யூரியா கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு, கூலியாட்கள் கிடைக்காத நிலை போன்ற வற்றால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் காட்டு பன்றிகளின் அட்டகாசத்தால் பெரும் துயருக்கு தள்ளப் பட்டுள்ளனர். காட்டுப்பன்றி களின் அட்ட காசத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து விவ சாயிகளின் வாழ்வாதா ரத்தை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

;