districts

img

தோழர் கே.எஸ்.பார்த்தசாரதியின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

இந்திய சுதந்திர போராட்ட வீரரும் கைத்தறி நெசவாளர்களின் மகத்தான தலைவருமான தோழர் கே.எஸ்.பார்த்தசாரதியின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு காஞ்சிபுரம் பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தேரடியில் மாவட்டத் தலைவர் ஜி.எஸ்.வெங்கடேசன் தலைமையில்  வெள்ளியன்று (மே 20) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் சம்மேளன (சிஐடியு)  பொதுச் செயலாளர் இ. முத்துக்குமார்,  கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.சிவப்பிரகாசம், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் கே.நேரு, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ஆர்.மதுசூதனன், ஜி.வசந்தா, கைத்தறி சங்க நிர்வாகிகள் ஜி.லட்சுமிபதி, ஆர்.கே.சந்திரன், கே.ஜீவா, கே.சங்கர் ஆகியோர் கலந்துக் கொண்டனர். முன்னதாக விளக்கடி கோவில் தெரு, கே.எஸ்.பி நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

;