திருப்பெரும்புதூர், ஜூன் 12 - காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் பொதுத் தொழிலாளர்கள் சங்க ஆண்டு பேரவை கூட்டம் (ஜூன்.12) ஞாயிறன்று திருப்பெரும்புதூரில் நடைபெற்றது. சங்கத் தலைவர் இ.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற பேரவை கூட்டத்திற்கு துணை செயலாளர் ஜெனிட்டன் வரவேற்க இணைச் செயலாளர் பி.அலெக்சாண்டர் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர் துவக்கி வைத்து பேசினார். செயலாளர் எஸ்.கண்ணன் வேலை அறிக்கையையும், பொருளாளர் கே.செந்தில்குமார் வரவு, செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். இந்த பேரவைக் கூட்டத்தை எம்.பாலசுப்ரமணியன் (ஜெ.கே டயர்ஸ்), எம்.மணிகட்டன் (அப்போலோ டயர்ஸ்), எம்.தினகரன் (ஹூண்டாய்), எம்.தமிழழகன் (யமஹா) ஆகி யோர் வாழ்த்திப் பேசினர்.
புதிய நிர்வாகிகள்
சங்கத்தின் தலைவராக இ.முத்துக்குமார், செயலாளராக எ.ஜெனிட்டன், பொருளாளராக பி.அலெக்சாண்டர் உள்ளிட்ட 15 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக யு. ஜெகதீஷ் நன்றி கூறினார்.