districts

போதை பழக்கத்திற்கு அடிமையான மகன் வேதனையில் தாய் தற்கொலை முயற்சி

தாம்பரம், செப்.5- காஞ்சிபுரம் மாவட்டம்  சோமங்கலம் அடுத்த  மலைப்பட்டு ரேணுகாம் பாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் சிவராஜ். இவரது மனைவி சசிகலா (வயது35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் 10-ம்வகுப்பு படிக்கும் இளையமகன் போதை பழக்கத்துக்கு அடி மையானதாக தெரிகிறது. இதனை தாய் சசிகலா பல முறை கண்டித்தும் மகன் கேட்கவில்லை. இதில் மனவேதனை அடைந்த சசிகலா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்த  2 மகன்களும் தாய் மீதி வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து தாங்க ளும் தற்கொலைக்கு முயன்றனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் மயக்க நிலையில் இருந்த சசிகலா மற்றும் அவரது 2 மகன்களையும் மீட்டு திருப்பெரும்புதூர் அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்க ளுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிப் பருவத்தி லேயே மகன் போதை பழக் கத்துக்கு அடிமையானதை கண்டு தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தாயின் நிலைக்கண்டு இரண்டு மகன்களும் விஷம்  குடித்த சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது. இது குறித்து  சோமங்கலம் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு  செய்து விசாரித்து வருகின்ற னர்.

;