districts

img

கள்ளக்குறிச்சியில் வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, டிச.21- புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட மக்கள் நலனை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு.சிவக்குமார், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சுந்தரவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநிலத் துணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்டச் செய லாளர் எம்.கே.பழனி, மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.சின்ராசு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.