districts

img

சிபிஎம் போராட்ட அறிவிப்புக்கு வெற்றி

கள்ளக்குறிச்சி மாவட்டம், இருந்தை ஊராட்சியில் வசிக்கும் அருந்ததியின மக்களுக்கு சுடுகாட்டுப் பாதை, சிமெண்ட் சாலை அமைத்து கொடுக்க வேண்டும். செங்குறிச்சி ஊராட்சியில் மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் பள்ளி கட்டிடம் அமைத்து தர வேண்டும், வேலூர் ஊராட்சியில் குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைத்து தர வேண்டும், பரிக்கல்லில் இஸ்லாமியர் வசிக்கும் பகுதியில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் ராஜி தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. திருநாவலூர் காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி உதவி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், மணிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினரும் ஒன்றிய கவுன்சிலருமான இ.அலமேலு, ஒன்றிய செயலாளர் மோகன் மற்றும் கலந்துகொண்டனர்.