கள்ளக்குறிச்சி, ஜூன் 16- மிகக்கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் குடும்பங்களுக்கு 13 வகையான ஊட்டச்சத்து மிக்க காய்கறி விதை களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளும், ஊட்டச்சத்து குறை பாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து கூடுதலாக ஊட்டச்சத்து உணவு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருநாவலூர் ஒன்றி யத்திற்குட்பட்ட பா.கிள்ளனூர் கிராமத்தில் உள்ள குழந்தைகள் மையத்தில் குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டன. அப்போது குழந்தைகளுக்கு கல்வியோடு நற்பண்புகளையும், நல்லொழுக்கங்களையும் குழந்தைகள் மைய அமைப்பாளர்கள் கற்றுத்தர அறிவுறுத்தப்பட்டது. மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 1.160 குழந்தைகள் மையங்களில் உள்ள 7.512 குழந்தைகள் குள்ளத்தன்மை, எடை குறைவு, உடல் மெலிவு மற்றும் ரத்த சோகை குறை பாடு உள்ளிட்ட மிக கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் விதமாக ஊட்டச்சத்து மிக்க காய்கறிகள் உட்கொள்வதற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்டப் பணிகள் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து குழந்தைகளின் வீடுகளிலும் தொடர்புடைய குழந்தைகள் பயிலும் மையத்திலும் ஊட்டச்சத்துமிக்க தோட்டம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி 7.512 குழந்தைகளின் குடும்பங்க ளுக்கு அவரை, பீன்ஸ், கத்தரி. வெண்டைக்காய், பப்பாளி, முருங்கை, பாகற்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், முள்ளங்கி, கொத்தவரை, அவரைக் காய், கீரை உள்ளிட்ட 13 வகையான ஊட்டச்சத்து மிக்க காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கி குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்திடுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். உடன் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் செல்வி இருந்தார்.