districts

img

விடுதி மாணவர்களுடன் உணவருந்தினார் ஆட்சியர்

கள்ளக்குறிச்சி,ஏப். 20- விடுதிகளில் மாணவர்க ளுக்கு வழங்கப்படும் உணவு தரமாகவும், குறித்த அளவீட்டிலும் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறி வுறுத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மாணவ, மாணவியர் விடுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் உணவு உள்ளிட்டவை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறதா என்பது குறித்து அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படை யில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்திற்குட்பட்ட தொட்டி யம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்ப டும் உணவின் தரம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். பிறகு, அந்த மாணவர்களுடன் அமர்ந்து உணவும் உண்டார். பின்னர், விடுதி உணவுக்கூடம் மற்றும் மாணவர்களுக்கு அன்றாடம் வழங்கப்படும் உணவு அட்டவணை உள்ளிட்ட வற்றையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக விடுதி கழிவறை, குளியலறை, மாணவர்கள் இருப்பிட அறை உள்ளிட்டவற்றை சோதனையிட்டார்.  கழிவறை, குளியலறை பயன்பாட்டிற்கு தண்ணீர் வசதி முறையாக ஏற்படுத்த தொடர்புடைய அலுவலர்களுக்கு அறி வுறுத்தினார். மேலும், உணவு தரமாகவும், அரசு நிர்ணயித்த அள வீட்டின்படி வழங்காத விடுதி காப்பாளர்கள், பணி யாளர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். மாணவர்கள் விடுதி யினை தங்கள் வீடு போல் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். விடுதியில் அடிப்படை வசதிகள் தொடர் பாக ஏதேனும் குறைகள் இருந்தால் ஆட்சியரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும் மாணவர்களிடம் கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சாந்தி உடனி ருந்தனர்.