districts

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை: அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி, மார்ச் 15- மாற்றுத்திறனாளிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், வீட்டு மனை பட்டா,  தொழில் தொடங்க கடன் உதவி, முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சிய ரிடம் அளித்தனர். பின்னர் மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.  முன்னதாக, மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கு தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடம் நேரடி யாக மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சி யர்,  மனுக்கள் மீது உடனடியாக நட வடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.