கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகத்தில் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்த ஜெயக்கொடி குடும்பத்திற்கு ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது ரூபாய் 2 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தா.உதயசூரியன், க.கார்த்திகேயன், ஏ.ஜெ.மணிக்கண்ணன், வருவாய் அலுவலர் சி.விஜய்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.